வன உயிரின விழா போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசளிப்பு

வன உயிரின வார விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வன உயிரின வார விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 தருமபுரி மாவட்டத்தில் வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் ஒüவையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை மாவட்ட வன அலுவலகத்தில் தருமபுரி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் அ.க.உலகநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் க.திருமால் முன்னிலை வகித்தார்.
 ஒவ்வொரு போட்டியிலும் பிரிவு வாரியாக முதல் பரிசு பெற்ற மாணவ, மாணவியர் சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் அக்.7-ஆம் தேதி நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில்
 கலந்துகொள்கின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com