பாஜக தலைவர் அமித் ஷா மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை தொலைத் தொடர்பு அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு தலைமை வகித்துப் பேசினார். முன்னாள் மாவட்டத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், ராஜாராம் வர்மா, நகரத் தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள் பாடி நாகராஜன், ஏ.குமரசேன் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், போலி நிறுவனங்கள் பெயரில் பல கோடி கடன் பெற்று ஊழலில் ஈடுபட்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளரை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், நிர்வாகிகள் ராஜ வீரப்பன், கனகராஜ், கெளதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.