நிலவேம்பு குடிநீர் விநியோகித்த முன்னாள் அமைச்சர்

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.
அதிமுக தினகரன் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன், வியாழக்கிழமை பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.
அப்போது,  அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தற்போதுள்ள அரசு டெங்குவை தடுக்கத் தவறிவிட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையே, தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் மீண்டும் அறிவித்துள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com