தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.
அதிமுக தினகரன் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன், வியாழக்கிழமை பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தற்போதுள்ள அரசு டெங்குவை தடுக்கத் தவறிவிட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையே, தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் மீண்டும் அறிவித்துள்ளனர் என்றார்.