ரூ. 23.20 லட்சம் "டாம்கோ' கடனுதவி வழங்கல்

தருமபுரி மாவட்டம், வாசிக்கவுண்டனூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில், 3 மகளிர் குழுக்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர்

தருமபுரி மாவட்டம், வாசிக்கவுண்டனூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில், 3 மகளிர் குழுக்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ரூ.23.20 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது .
தருமபுரி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் மா.சந்தானம் விழாவுக்கு தலைமை வகித்தார். மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா முன்னிலை வகித்தார்.  இதில், 3 குழுக்களைச் சேர்ந்த 46 பேருக்கு இந்தக் கடனுதவி வழங்கப்பட்டது.
விழாவில், சரக துணைப் பதிவாளர் எஸ்.ரவிச்சந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் வெ.நாராயணன், சங்கத் தலைவர் ராமசாமி, பள்ளிப்பட்டி பங்குத் தந்தை ஜெகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாசிகவுண்டனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலர் ஸ்டாலின் மணிக்குமார் வரவேற்றார். முதுநிலை எழுத்தர் மாணிக்கம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com