லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர் சாவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர் ரமேஷ் (49) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர் ரமேஷ் (49) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள முள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்.  இவர், லாரியில்  பாரம் ஏற்றிக்கொண்டு சென்னை செல்வதற்காக சேலம்-அரூர் நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.
அப்போது, அ.புதுப்பட்டியில் எதிரே வந்த மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநர் ரமேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதில் காயம் அடைந்த லாரி ஓட்டுநர் சதாசிவம் (32) தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com