விவசாயி கொலை வழக்கில் 3 பேர் கைது

மொரப்பூர் அருகே விவசாயி கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

மொரப்பூர் அருகே விவசாயி கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
 பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெப்பாலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவலிங்கம் (62). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி குள்ளு (57) குடும்பத்தினருக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட நிலத் தகராறில் சிவலிங்கம் உயிரிழந்தார்.
இதில் தொடர்புடைய விவசாயி குள்ளு, தருமபுரியில் நீதிமன்றத்தில் அண்மையில் சரண் அடைந்தார். இதைத் தொடர்ந்து, இவ் வழக்கில் தொடர்புடைய குள்ளுவின் மனைவி மேனகா (54), மகன்கள் ஞானசேகரன் (37),  சந்திரசேகரன் (35) ஆகியோரை மொரப்பூர் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com