அரூரில் பேரூராட்சிப் பணியாளர்கள் திங்கள்கிழமை டெங்கு தடுப்புப் பணி மேற்கொண்டனர்.
அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 8, 10 மற்றும் 12-ஆவது வார்டுகளில் பேரூராட்சிப் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று தேவையற்ற பொருள்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள், உரல்கள், குளிர்சாதனப் பெட்டிகள், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யும் பணியிலும், தூய்மைப் பணியிலும் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, குடிநீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்யப்பட்டது. டெங்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
முகாமில், அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) மா.ராஜா ஆறுமுகம், துப்புரவு ஆய்வாளர் கோ.சிவக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.தொல்காப்பியன், சுகாதார ஆய்வாளர் என்.இளவரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.