தருமபுரியில் நடைபெற்ற மாவட்ட சைக்கிள் போட்டியில், அதகப்பாடி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான அண்ணா பிறந்தநாள் விழா விரைவு சைக்கிள்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில், பங்கேற்ற அதகப்பாடி பள்ளி மாணவர்கள், 17 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில், டி.சீனிவாசன், 15 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில், எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்பிடம் பெற்று, வெண்கலப் பதக்கம், சான்றிதழ் பெற்றனர். மேலும், இதே பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்து சான்றிதழ்களை பெற்றனர்.
இந்த மாணவர்களை, பள்ளித் தலைமை ஆசிரியர் கே.பச்சியப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனர்.