பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2016, செப்.1 முதல் 2017, ஆக.31 வரையிலான காலத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு தருமபுரி மாவட்டக் காவல் துறை சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட நினைவுத் தூணுக்கு மாவட்டக் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, மும்முறை 21 குண்டுகள் முழங்க காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
துணைக் கண்காணிப்பாளர்கள் அன்புராஜ், த.காந்தி, செல்லப்பாண்டியன், சந்திரசேகர், சுப்பையா மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரியில்... பணியின் போது உயிரிழந்த 370 காவலர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறை சார்பில், கிருஷ்ணகிரி ஆயுதப் படை மைதானத்தில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, 24 காவலர்கள் மூன்று முறை துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரராகவன், துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார், பாஸ்கரன், ராஜேந்திரன், சண்முகசுந்தரம், சங்கர், தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் முத்தமிழ் செல்வராசு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com