தருமபுரி அருகே ஆசிரியரிடம் 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
தருமபுரியை அடுத்த ஒட்டப்பட்டி சித்தேஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் கலைவாணன். இவர், ராஜாதோப்பு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
இவர் தனது தாயுடன் ஒட்டப்பட்டியில் உள்ள வங்கிக்கு நகைகளை அடகு வைத்து, அதற்குரிய பணம் ரூ.2 லட்சத்தை ப் பெற்றுக் கொண்டு, அதனுடன் 10 பவுன் தங்க நகையையும் ஒரு பையில் வைத்து இருசக்கர வாகனத்தில் வங்கியில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கலைவாணனின் கவனத்தை திசை திருப்பி, அவர் வைத்திருந்த பணம் மற்றும் நகையைப் பறித்துச் சென்றனர்.
புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.