தருமபுரி மாவட்ட வன அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தூய்மை சேவை உறுதிமொழியேற்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் தி.கண்ணன் தலைமையில், அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் உறுதிமொழியேற்றனர்.
இதில், மகாத்மா காந்தி பிறந்த நாளானஅக்டோபர் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ள "தூய்மையே சேவை' இயக்கத்தில் முழுமையாக அர்ப்பணித்து, அதன் மூலம் சுத்தமான, சுகாதாரமான, புதிய பாரதத்தை உருவாக்கவும், வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்களில் தூய்மையைக் கடைபிடிப்பது எனவும், திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களும், நகரங்களும் உருவாக்க பாடுபடுவோம் எனவும், கழிப்பறைகள் பயன்படுத்துவதுடன், கை, கால்களை சுத்தமாகக் கழுவுதல் மற்றும் இதர சுகாதார பழக்கங்களையும் கடைபிடிப்போம் என உறுதிமொழியேற்றனர்.