மொரப்பூரை அடுத்த சாமண்டஹள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் தொற்றா நோய்கள், மகளிர் மருத்துவம் தொடர்பாக சிறப்பு பரிசோதனை, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.