தருமபுரியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி, அண்மையில் பாஜகவினர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்றனர்.
நகரத் தலைவர் கே.சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்டத் தலைவர் ஆர்.எ.வரதராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பேசினர். இதில், தீண்டாமை ஒழிப்பு, சனத்குமார் நதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. நகர பொதுச் செயலர்கள் சக்திவேல், எஸ்.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.