தருமபுரியில் புதன்கிழமை (பிப்.14) கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, கோட்டாட்சியர் ராமமூர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய வருவாய் வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறை தீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என்றார்.
அரூரில்... அரூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் புதன்கிழமை (பிப்.14) நடைபெறுகிறது.
காலை 11 மணியளவில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் வருவாய் வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என கோட்டாட்சியர் கே.பத்மாவதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.