பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், குண்டல்மடுவு கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் திவாகர் (23). இவர் திங்கள்கிழமை பி.துறிஞ்சிப்பட்டியில் குப்புசாமி என்பவரது வீட்டின்
மேல்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வீட்டின் மேல் பகுதியில் சென்ற மின்கம்பி திவாகர் மீது உரசியுள்ளது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் நிகழ்விடத்திலேயே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து பொம்மிடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.