தருமபுரி அருகே மூக்கனஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆசிரியை யமுனாபாய் தலைமை வகித்து, விவேகானந்தர் பிறந்த நாளை தேசிய இளைஞர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருவது குறித்தும், விவேகானந்தரின் ஆன்மிக சொற்பொழிவுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
தேசிய பசுமைப்படை அமைப்பின் ஆசிரியர் மு.கா.நெடுமாறன், ஆசிரியை மோகன சுந்தரி, ஆசிரியர்கள் வெங்கடேசன், தமிழரசு, ஆய்வக உதவியாளர் தசரதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து, புது பானை, கரும்பு வைத்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நடைபெற்றது.