மூகாம்பிகை பாலிடெக்னிக் மாணவர்கள் வாரியத் தேர்வில் சிறப்பிடம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டிலுள்ள மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று அரசு வாரியத் தேர்வு எழுதிய மாணவர்கள் மாநிலத்தின் பல சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டிலுள்ள மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று அரசு வாரியத் தேர்வு எழுதிய மாணவர்கள் மாநிலத்தின் பல சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் ஜி. வைரமுத்து மொத்த மதிப்பெண்களான 700-க்கு 696 மதிப்பெண்கள் எடுத்து, மாநிலத்தில் 5ஆம் இடத்தையும், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் படித்த என். சக்தி மற்றும் எஸ். புவனேஸ்வரி ஆகியோர் 695 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் 6ஆம் இடத்தையும், இதே துறையில் மாணவர் பி. விக்னேஷ் 694 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 7ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
முதலாம் ஆண்டு மாணவர் சத்தியமூர்த்தி மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு 788 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் சிறப்பிடத்தையும் பிடித்துள்ளார். 47 பேர் 95 சதவிகித மதிப்பெண்களுக்கு மேலும், 115 பேர் 90 சதவிகித மதிப்பெண்களுக்கு மேலும், 267 பேர் 80 சதவிகித மதிப்பெண்களுக்கு மேலும் எடுத்துள்ளனர். கருத்தியல் பாடங்களில் மட்டும் 57 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரித் தலைவர் கோவிந்தராஜ் பாராட்டி பரிசுகளை வழங்கினார். கல்லூரிச் செயலர் மதன்மோகன், லட்சுமி சரஸ்வதி அறக்கட்டளை பொருளாளர் ராஜாகவுண்டர், அறக்கட்டளை செயல் இயக்குநர் மாதுளம்பூ, கல்லூரி முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோரும் மாணவர்களைப்
பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com