தருமபுரி அஞ்சல் கோட்ட மக்கள் குறைகேட்புக் கூட்டம் மற்றும் ஓய்வூதியர்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் ஜூன் 25-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, அஞ்சல் சேவை நுகர்வோர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெளிவாக எழுதி, வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சி.சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.