தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவிடத்தில், ரூ. 1.5 கோடியில் பாரத மாதாவுக்கு ஆலயம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு பாரத மாதா ஆன்மிக சேவை மையம் நன்றி
தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கும், பாரத மாதா ஆலயம் அமைப்பதற்காக பல முறை நடைபயணம் மேற்கொண்ட குமரிஅனந்தன் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை வரும் ஜூலை 15ஆம் தேதி நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக, சேவை மையத்தின் செயலர் தகடூர் இரா. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.