உலக திறனாய்வு தேர்வு விளையாட்டுப் போட்டிகளில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
மாவட்ட அளவிலான உலக திறனாய்வு விளையாட்டுப் போட்டிகள் தருமபுரியில் அண்மையில் நடைபெற்றன. இப் போட்டிகளில் பங்கேற்ற அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கணபதி (நீளம் தாண்டுதல்), சிவனேஷ்வரன் (800 மீட்டர் ஓட்டம்) ஆகியோர் முதலிடம் பெற்றனர். இதேபோல், மாணவர் கதிரவன் உயரம் தாண்டுதலில் 2-ம் இடமும், மாணவர் முகமது இம்ரான் குண்டு எறிதலில் 3-ம் இடமும் பெற்றனர்.
தற்போது இந்த மாணவர்கள் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.
விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை, உடல் கல்வி இயக்குநர்கள் அசோகன், முருகேசன் ஆகியோரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குழந்தைவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.