தருமபுரி அருகே தனியார் பள்ளிப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி, பேருந்தின் பின் சக்கரம் ஏறி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த வஜ்ஜிரவேல் மகள் நேஷ்திகா (13. இவர் பென்னாகரம் நெடுஞ்சாலையிலுள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை வழக்கம்போல , பள்ளி நேரம் முடிந்ததும் பள்ளிப் பேருந்தில் ஏறி வீட்டுக்குத் திரும்பியுள்ளார். நல்லாம்பட்டி கிராமத்தில் குழந்தைகளை இறக்கிவிட பேருந்து சென்றபோது, சாலை வளைவில் எதிர்பாராத விதமாக முன்பக்கப் படியில் இருந்து மாணவி நேஷ்திகா தவறி விழுந்தார். பேருந்தின் பின்சக்கரம் நேஷ்திகாவின் உடலில் ஏறியது. இச்சம்பவத்தில் மாணவி உடல் நசுங்கி அந்தஇடத்திலேயே உயிரிழந்தார். பென்னாகரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.