தருமபுரி மாவட்ட தலைமை மருத்துவமனை (ம) அரசு தொழுநோய் மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஒரு சமையலர், இரண்டு சலவையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு தொழுநோய் மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஒரு சமையலர், இரண்டு சலவையாளர் பணியிடங்களுக்கு அரசு விதிகளின்படி முன்னுரிமை, இடஒதுக்கீடு அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சமையலர் பணியிடத்துக்கு மிகவும் பிற்பட்டோர் (முன்னுரிமை), சலவையாளர் ஒரு இடம் பொதுப்பிரிவு (முன்னுரிமை) மற்றொரு இடம் எஸ்.சி.ஏ (ஆதரவற்ற விதவை - முன்னுரிமை), அதேபோல ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு சலுகை உண்டு.
தகுதியுள்ளவர்கள் தங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வித் தகுதி, வயது, சாதி (உள்பிரிவு), முன்னுரிமை விவரம் ஆகிய சுய விவரங்களுடன் விண்ணப்பத்தை வருகிற மார்ச் 30 மாலை 5 மணிக்குள், இணை இயக்குநர் நலப் பணிகள், குப்பூர், தருமபுரி என்கிற முகவரியில் சேர்க்கவேண்டும்.
இப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக, ஏற்கெனவே, 2017 நவம்பர் 16 மற்றும் 2018 பிப் 28-ஆம் தேதி நடத்தப்பட்ட நேர்காணல் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது என்றார்.