மே 29-இல் பிஎஸ்என்எல் சிறப்பு மேளா
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரும் மே 29ஆம் தேதி பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் சிறப்பு மேளாக்கள் நடைபெறவுள்ளதாக பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு மாவட்டப் பொது மேலாளர்
கோ. பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதன்படி, மேளாக்கள் நடைபெறும் இடங்கள்: தருமபுரி இடென்பி தொலைபேசி நிலையம், குமரபுரி குடியிருப்பு, அரசு கலைக் கல்லூரி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், ஹனுமன்தீர்த்தம், ராமியணஅள்ளி, கீரைப்பட்டி, சவுளூர் கூட்டுச் சாலை, பாலக்கோடு, வெள்ளிச்சந்தை.
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை, ஜகுண்டம்புதூர், காவேரிப்பட்டிணம், பர்கூர், வரட்டனப்பள்ளி, குந்தாரப்பள்ளி கூட்டுச் சாலை, குந்தாரப்பள்ளி, கந்திக்குப்பம், சிங்காரப்பேட்டை, அரசம்பட்டி, ஒசூர் அம்மா உணவகம், ஒசூர் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, சிப்காட் பேருந்து நிலையம், மதகொண்டபள்ளி பேரிகை, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை பேருந்து நிலையம், ஹனுமன்தீர்த்தம், ராயக்கோட்டை.