சிட்லிங்கில் புறக்காவல் நிலையம் திறப்பு

அரூரை அடுத்த சிட்லிங்கில் புறக்காவல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

அரூரை அடுத்த சிட்லிங்கில் புறக்காவல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
அரூர் வட்டம், கோட்டப்பட்டியில் காவல் நிலையம் உள்ளது. இந்தக் காவல் நிலையத்துக்கும் சிட்லிங் மலைக் கிராமத்துக்கும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரமுள்ளது. இந்த நிலையில், சிட்லிங், ஏ.கே.தண்டா, எஸ்.தாதம்பட்டி பகுதியிலுள்ள மக்கள் காவல் நிலையத்துக்குச் செல்ல வேண்டும் எனில், கோட்டப்பட்டி செல்ல வேண்டும். இந்தப் பகுதி போதிய போக்குவரத்து வசதியில்லாத பகுதியாகவும், மலைக் கிராமங்களாகவும் உள்ளது. இதையடுத்து, குற்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் வகையில், சிட்லிங் பகுதியில் புறக்காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, சிட்லிங் புறக்காவல் நிலையத்தை ஏடிஎஸ்பி ராஜ்மோகன் தொடக்கி வைத்தார். இதில், அரூர் டிஎஸ்பி ஏ.சி.செல்லப்பாண்டியன் உள்ளிட்ட காவல் துறையினர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com