பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களுக்கான நேர்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாலக்கோடு ஓன்றியம் எம்.செட்டிஅள்ளி மற்றும் குட்லான அள்ளி ஆகிய 2 காலி பணியிடங்களுக்கு, பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில் 75 பெண்கள் கலந்துகொண்டனர். விண்ணப்பித்தோரிடம் அசல் பள்ளிச் சான்று, குடும்ப அட்டை, ஆதார்அட்டை போன்ற சான்றிதழ்களை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமஜெயம் மேற்பார்வையில் சரிபார்க்கப்பட்டது.