காய்ச்சல் பாதிப்பை தடுக்க மருத்துவக் குழுக்கள் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பை தடுக்க, கிராமங்கள்தோறும் மருத்துவக் குழுக்கள் அமைக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பை தடுக்க, கிராமங்கள்தோறும் மருத்துவக் குழுக்கள் அமைக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் வியாழக்கிழமை திமுக மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் அக் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் ஜி.வி.மாதையன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ., திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் பார் இளங்கோவன், தமிழ்மணி ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் தற்போது டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புகளைத் தவிர்க்க, அனைத்து கிராமங்களிலும் மருத்துவக் குழுக்கள் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். உள்ளாட்சி நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்டம், அரூரில் வரும் நவ. 24-ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் திரளானோரை பங்கேற்க செய்வது மற்றும் மக்களவைத் தேர்தல், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது நடைபெற்றாலும், அதில் திமுக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com