கிருஷ்ணகிரியில் இருநாள்களாக நடைபெற்ற தட்டச்சு தேர்வில் 1,300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறையின் சார்பில் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில் நுட்பக்கல்லூரியில் தட்டச்சு தேர்வானது இருநாள்கள் நடைபெற்றன. சனிக்கிழமை முதல் நாள் தமிழ், ஆங்கிலம் இளநிலை தேர்வும், ஞாயிற்றுக்கிழமை தமிழ், ஆங்கிலம் மொழிகளுக்கான முதுநிலை தேர்வும் நடைபெற்றன.
இந்தத் தேர்வுகளில் மாவட்டத்தைச் சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்தத் தேர்வின் கண்காணிப்பாளராக சுப்பையா, கூடுதல் கண்காணிப்பாளர்களாக தெய்வஜோதி, மாரிமுத்து உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.