அரூரில் திங்கள்கிழமை அதிகாலை 33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை 33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது பதிவாகியுள்ளது. இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டியில் 2.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அரூர், எச்.ஈச்சம்பாடி, கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. அதே சமயம் தீர்த்தமலை, சித்தேரி, கீரைப்பட்டி உள்ளிட்ட பகுதியில் லேசான அளவில்கூட மழை இல்லை. இதனால் அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.