கைப்பந்துப் போட்டி: பேதாதம்பட்டி பள்ளி சிறப்பிடம்

தருமபுரி மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் பேதாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

தருமபுரி மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் பேதாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
தருமபுரி மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிகள் மொரப்பூர் விஸ்வபாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 14-வயதுக்குள்பட்டோர் பிரிவில் பங்கேற்ற பேதாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இ.ஆனந்தன், உதவி தலைமை ஆசிரியர் வே.முத்துக்குமார், உடல் கல்வி ஆசிரியர் ந.சங்கர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com