அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை அரூர் போலீஸார் கைது செய்தனர்.
அரூர் வட்டம், நாச்சினாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (38). இவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரை அவதூறாகப் பேசிய விடியோவை வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வி.சி கட்சி ஒன்றியச் செயலர் மா.ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில்,
அரசியல் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தல், தகாத வார்த்தையில் பேசுதல், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, ஆனந்தனை அரூர் போலீஸார் கைது செய்தனர்.