தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அண்ணா பிறந்த நாள் விழா

அண்ணா பிறந்த நாளையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


அண்ணா பிறந்த நாளையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமையில் அக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.என்.பி.இன்பசேகரன், முன்னாள் எம்எல்ஏ மனோகரன் உள்பட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.
அதிமுக: இதேபோல, அதிமுக நகரச் செயலர் குருநாதன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் உள்ளிட்டோர் பல்வேறு நிர்வாகிகள் தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமமுக: அமமுக மாவட்டச் செயலர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் ஆர்.ஆர்.முருகன், எம்.ஜி.மணிவண்ணன் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
மேலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்ணா பிறந்த நாள் விழாவை அரசியல் கட்சியினர் கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி
திமுக: கிருஷ்ணகிரியில் நகர திமுக சார்பில் புறநகர்ப் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அக் கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.கே.நவாப் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினர்.
மாவட்டப் பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, ஒன்றியச் செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, பர்கூர் ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, பேரூராட்சிச் செயலாளர் பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக: கிருஷ்ணகிரியில் நகர அதிமுக சார்பில் ராசி வீதியில் உள்ள அண்ணா சிலைக்கு அக் கட்சியின் நகரச் செயலாளர் கேசவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, தங்களது மகிழ்ச்சியை அதிமுகவினர் வெளிப்படுத்தினர்.
தி.க: காவேரிப்பட்டணத்தில் திராவிடர் கழகம் சார்பில் பழைய பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அந்த அமைப்பின் தலைவர் சி.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் தருமபுரி மண்டல செயலாளர் கோ.திராவிட மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒசூர்
ஒசூர் வட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர திமுக சார்பில் அதன் பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிறுபான்மையினர் நல பிரிவு துணைச் செயலாளர் விஜய்குமார், மாவட்ட துணைச் செயலாளர் தனலட்சுமி,தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுகுமாறன்,பொதுக்குழு உறுப்பினர் முனிராமைய்யா,முன்னாள் நகரச் செயலாளர்கள் குருசாமி, அக்ரோ ஏ.நாகராஜ், பு.ச. நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்எல்ஏ வெங்கடசாமி, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ராஜா,பொறியாளர் அணி ஞானசேகரன், துணை அமைப்பாளர் செந்தில், இலக்கிய அணி எல்லோரமணி, தொமுச மாவட்ட அமைப்பாளர் மஞ்சுநாத், பொருளாளர் சென்னீரப்ப உள்பட பலர் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
அரூர்
அமமுக: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், அக் கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆர்.ஆர்.முருகன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கட்சியின் மாவட்ட கழக துணைச் செயலாளர் எம்.ஏ.ஏகநாதன், அம்மா பேரவை மாவட்டச் செயலர் சி.தென்னரசு, நகரச் செயலர் ரா.திருவேங்கடம், ஒன்றியச் செயலர்கள் வி.தீர்த்தகிரி, அருள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திமுக: அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் தலைமையிலான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒன்றியச் செயலாளர் தேசிங்குராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.வேடம்மாள், இளஞ்செழியன்,
ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை அமைப்பாளர் எஸ்.ராஜேந்திரன், வழக்குரைஞர் பொதிகைவேந்தன், செந்தாமரைக்கண்ணன், மொரப்பூர் வாசுதேவன், கு.தமிழழகன், தேவராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், திமுக நகரச் செயலாளர் முல்லை செழியன் தலைமையில், அக் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜி.திருமால்செல்வன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் செ.கிருஷ்ணகுமார், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் மு.கா.முகமதுஅலி, தொமுச மாநில துணைத் தலைவர் ஜெ.பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதிமுக: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், குமார், ராமதாஸ், மகாராஜன், வெள்ளைமுருகன், மாரியப்பன், சிற்பி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கழக துணைச் செயலர் செண்பகம் சந்தோஷ், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்னாள் தலைவர் வளர்மதி முருகேசன், மாவட்ட பிரதிநிதிகள் ஏ.சம்பத், சாமிக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com