தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 25) பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் சிறப்பு மெகா மேளாக்கள் நடத்தப்படவுள்ளதாகவும், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தருமபுரி தொலைத்தொடர்பு மாவட்ட பிஎஸ்என்எல் பொதுமேலாளர் கே. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
மெகா மேளாக்கள் நடைபெறவுள்ள இடங்கள்:
இடென்பி தொலைபேசி நிலையம், பிளவர் மில் பென்னாகரம் சாலை, ஒட்டப்பட்டி, நான்கு சாலை, ஆட்சியரகம், மாட்லாம்பட்டி, காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், பெரியாம்பட்டி, கடத்தூர், மெனசி, மொரப்பூர், ராயக்கோட்டை.
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை, எம்எஸ்யு தொலைபேசி நிலையம், பர்கூர், காவேரிப்பட்டினம், காரப்பட்டி, ஆனந்தூர், அகரம், அரசுக் கலைக் கல்லூரி, ஊத்தங்கரை பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம்.
ஒசூர் பேருந்து நிலையம், முனீஸ்வர் நகர், அரசு மருத்துவமனை அருகில், கிளைச் சிறை சாலை, பாகலூர், காலுகொண்டப்பள்ளி, தேன்கனிக்கோட்டை.