கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பில், கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் அனைத்து வட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. இதில், தருமபுரி,  நல்லம்பள்ளி, பென்னாகரம்,  பாலக்கோடு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற போட்டிகளில், அந்தந்த கிராம பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தடகளம்,  கபடி, வாலிபால் போட்டிகள் இருபாலருக்கும், கால்பந்துப் போட்டிகள் ஆண்களுக்கு மட்டும் நடைபெற்றன. இப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதேபோல, காரிமங்கலம்,  மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் வருகிற செப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளன. போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர், கிராம ஊராட்சிச் செயலர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com