காரிமங்கலம்
காரிமங்கலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (செப்.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் எம்.எஸ். மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
காரிமங்கலம், அனுமந்தபுரம், அண்ணாமலை அள்ளி, தும்பல அள்ளி, கெண்டிகான அள்ளி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, பண்ணந்தூர், வேலம்பட்டி, நாகரசம்பட்டி, நெடுங்கல், திண்டல், பந்தாரஅள்ளி, எச்சனஅள்ளி, கே.மோட்டூர், பெரியமிட்டஅள்ளி, பூமாண்டஅள்ளி, காளப்பனஅள்ளி, பைசுஅள்ளி, கோவிலூர், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.