ஒசூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 15 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஒசூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (47). இவர் பாரதி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறர். இவருக்கு விஜயலட்சுமி (37) என்ற மனைவியும், ஆதித்யா (11), தருண் (4) என்ற 2 மகன்களும் உள்ளனர். பாலசுப்பிரமணி வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்று விட்டார். அவரது மனைவி விஜயலட்சுமியும் வேலைக்கு சென்று விட்டார். அவர்களின் மகன்கள் 2 பேரையும் ஈஸ்வர் நகரில் உள்ள தனது தந்தை ராமமூர்த்தி வீட்டில் விஜயலட்சுமி விட்டு சென்றார். மாலை வீட்டிற்கு வந்த பாலசுப்பிரமணி தனது மனைவியை அழைத்து வருவதற்காகச் சென்றார்.
அந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், 15 ஆயிரம் ரொக்கம், அரை கிலோ வெள்ளி நகைகள், மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்றனர். வீட்டிற்கு வந்த பாலசுப்பிரமணி வீட்டில் நகைகள், பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அட்கோ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.