கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவர்களின் அனைத்துச் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சத ஒதுக்கீட்டை சட்டபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போராட்டதை சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். இதில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் உதயசூரியன், சங்கரன், கைலாஷ், செந்தில்நாதன், ராமநாதன், கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தை அரசு மருத்துவ அலுவலர் ஹரிராம் ஒருங்கிணைத்தார்.