மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கர்நாடக மாநிலத்துக்கு மணல் கடத்தி சென்ற லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலத்துக்கு மணல் கடத்தி சென்ற லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 ஒசூர் சிப்காட் காவல் ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போலீஸார் ஒசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூசூவாடி சோதனைச் சாவடி அருகில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், திருச்சியில் இருந்து கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு 3 யூனிட் மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் மணலுடன் லாரியை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநர் பாலக்கோட்டைச் சேர்ந்த பாண்டுரங்கன் (24) மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com