பர்கூரை அடுத்த வரட்டணப்பள்ளியில், எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள வரட்டணப்பள்ளி கீழ் தெரு, சந்தைப்பேட்டை மைதானத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் பர்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. குறிப்பிட்ட தூரத்தை விரைவாக கடந்த எருதின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற 10-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.