கிருஷ்ணகிரி மின்கோட்டத்தில் வி.மாதேப்பள்ளி துணை மின்நிலையத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதால், சனிக்கிழமை (ஏப்.29) காலை 9 முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் எஸ்.கோவிந்தராஜு தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வேப்பனஅள்ளி, சின்னபொம்பரசப்பள்ளி, கே.கொத்தூர், சிகர்மானப்பள்ளி, தடத்தாரை, குருபரப்பள்ளி, நாடுவனப்பள்ளி, கங்கசந்திரம், சோமநாதபுரம், குப்பச்சிப்பாறை, பீமாண்டப்பள்ளி, ஜீனூர், டி.கே.பி.பள்ளி, விநாயகபுரம்.