விநாயகர் சிலை வைக்க முன்அனுமதி தேவை

விநாயகர் சிலை வைக்க அனுமதி பெற காவல் துறையினரிடம் ஆக.23-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விநாயகர் சிலை வைக்க அனுமதி பெற காவல் துறையினரிடம் ஆக.23-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியான செய்தி: விநாயகர் சதுர்த்தி வரும் ஆக.25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிலை வைத்து வழிபட உள்ள பக்தர்கள் ஆக.23-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும்.
 சிலை வைக்கப்பட உள்ள இடம், சிலையின் உயரம், வைக்கப்படும் நாள்கள், கரைக்க எடுத்துச் செல்லும் வழித்தடம், கரைக்கப்படும் இடம் மற்றும் நேரம் போன்ற விவரங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com