ஒசூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து பெருமாள் மணிமேகலைப் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்ட ரத்த தான முகாமை கல்லூரித் தலைவர் பி.பெருமாள் தொடக்கிவைத்தார். பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் பி.மலர், செயலாளர் குமார், பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் மற்றும் ஐ. டி.ஐ. யின் இயக்குநர் என். சுதாகரன், பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் முதல்வர் பாலசுப்பிரமணியம், பி.எம்.சி டெக் சமூக சேவை துறை ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், இயந்திரவியல் துறைத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் பேசினர்.
ரத்த வங்கி மருத்துவ அலுவலர் நவநீதன், ரத்த தானம் செய்வதின் அவசியம் குறித்து விளக்கினார். 87 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். முகமது அப்பாஸ் மற்றும் மாணவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.