நகரசம்பட்டி அருகே ஏற்பட்ட நிலத் தகராறில், மோதலில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்த போலீஸார், தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
நகரசம்பட்டியை அடுத்த மருதேறி கிராமத்தில் வசித்து வரும் முத்து உடையாரின் மகன் ஆறுமுகத்துக்கும், அவரது உறவினரான சின்ன முத்து மகன் கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தகராறு ஏற்பட்டு, அதுகுறித்த வழக்கு போச்சம்பள்ளி நிதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் மீண்டும் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. பிறகு இருவரும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகம், ராஜதுரை, வெங்கடேசன் சந்திர காந்தி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணமூர்த்தி, அனந்தலட்சுமி இருவரின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர், தலைமறைவாகியுள்ள ஆறுமுகம் மனைவி சந்திர காந்தியை நாகரசம்பட்டி போலீஸார் தேடி வருகின்றனர்.