தருமபுரி பாரதிபுரம் அறிவுத் திருக்கோயிலில் வேதாத்திரி மகரிஷி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தருமபுரி அறிவுத் திருக்கோயில் செயலர் ஜே.பி.அஸ்வத்நாராயணன் தலைமை வகித்தார். ஆழியாறு அறிவுத் திருக்கோயில் முதுநிலை பேராசிரியர் வேத சுப்பையா, வேதாத்திரி மகரிஷிகளின் கருத்துகளை எடுத்துரைத்தார்.
விழாவில், யோகா பேராசிரியர் வெங்கடேசன், துணை பேராசிரியர்கள் கே.குமரவேல், வி.சுப்பிரமணியன், எஸ்.வேதபுரி, பரிமளா, பிரபாகரன் மற்றும் அறங்காவலர்கள் கலந்துகொண்டனர்.