பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்தும், உரிய நீதி வழங்கக் கோரியும் கிருஷ்ணகிரியில் எஸ்.டி.பி.ஐ.,  த.மு.மு.க. சார்பில் தனித்தனியே ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்தும், உரிய நீதி வழங்கக் கோரியும் கிருஷ்ணகிரியில் எஸ்.டி.பி.ஐ.,  த.மு.மு.க. சார்பில் தனித்தனியே ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவர் ஷாநவாஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் அஸ்கர் அலி, செயலாளர் ஷப்பீர், ஷாஜி மஸ்ஜித் தலைவர் முஷ்டாக் அஹமத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே  த.மு.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், உரிய நீதி வழங்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com