போச்சம்பள்ளி அருகே சாலையில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யக் கோரிக்கை

போச்சம்பள்ளியை அடுத்த களர்பதி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

போச்சம்பள்ளியை அடுத்த களர்பதி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 தருமபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று ஆங்காங்கே தார்ச் சாலை போடப்பட்டது. அந்த வகையில், போச்சம்பள்ளியை அடுத்த களர்பதி கிராமத்தில் உள்ள ஏரிப் பகுதியில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு சாலை விரிவாக்கம் செய்து தார்ச் சாலை அமைக்கப்பட்டது.
 சாலை அமைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள்ளாகவே களர்பதி ஏரியின் சாலையோரம் சுமார் 30 அடி தூரத்துக்கு பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் அரை அடி அகலத்தில் இந்த விரிசல் இருப்பதால், வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள் அதில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன. இரவு நேரங்களில் அப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் விரிசல் இருப்பதே தெரியாமல் பலர் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, உடனடியாக விரிசலை சரிசெய்து விபத்தை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com