பெங்களூரு - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி பி.புதூர் பகுதியில் சிதிலமடைந்து காணப்படும் பெங்களூரு- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை எண் 77 சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி பி.புதூர் பகுதியில் சிதிலமடைந்து காணப்படும் பெங்களூரு- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை எண் 77 சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சாலையை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. கடந்த மாதம் பெய்த கன மழையின்போது மழை நீர் சாலையில் தேங்கியதாலும், தாழ்வான பகுதியில் சாலை உள்ளதால் மேடான பகுதியில் இருந்து வரும் நீர் தேங்கியதாலும் சாலை முற்றிலும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. இந்தச் சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருவோர் இங்குள்ள சாலை பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். 
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com