ஒசூரில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீனவர்களின் துயரத்துக்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம் என்று கண்டனம் தெரிவித்து, ஒசூரில், மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராம்நகர் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் பரசுராமன் கண்டன உரையாற்றினர். இதில் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பாகலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் காந்தன் நன்றி கூறினார்.