ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு சி.சி.இ. முறை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் இந்துமதி முன்னிலை வகித்தார். அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரிச் செயலர் ஷோபா திருமால்முருகன் கலந்து கொண்டு பேசினார்.
சிறப்பு விருந்தினராக சேலம் உத்தமசோலபுரம் உதவிப் பேராசிரியர் டாக்டர் பீட்டர் கலந்து கொண்டு பேசினார்.
கருத்தரங்குக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி. கணபதிராமன், கல்லூரிப் பேராசியைகள் கலந்து கொண்டனர்.