கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 கிருஷ்ணகிரி அருகே பெரியபனமுட்லு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் ப.சுரேஷ் தலைமை வகித்தார். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
 சூலாமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.சாந்தி தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 மேகல சின்னம்பள்ளி காமராசர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ரவி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மாரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கவிஞர் தமிழவன், கல்விக்கு வித்திட்ட காமராஜர் என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் சி.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். பாரத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் காமராஜரின் உருவப் படத்துக்கு பள்ளியின் நிறுவனர் மணிமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மருத்துவர் சந்தோஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com