ஒசூரில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.65 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.
ஒசூர் கோகுல் நகர் அருகே உள்ள திருகயிலை பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன்(59). இவர் தொழில்சாலைக்கு உணவு தயாரித்து கொடுத்து வந்தார். அவருக்கு தேவி(47) என்ற மனைவியும், வெள்ளைசாமி(27),பாலசுப்பிரமணியம்(25) என்ற இரு மகன்களும் உள்ளனர்.
குடும்பத்துடன் சனிக்கிழமை மைசூரு சென்ற பழனியப்பன், ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்தார். அப்போது, கதவு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தார். வீட்டிலிருந்த ரூ.65 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து ஒசூர் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.